நான்
பகடை விளையாட்டிற்குப்
பழக்கப்பட்டவனில்லை;
வலுக்கொண்டு திணிக்கப்படுகின்றேன்.
இல்லை,
வலியச் சென்று ஆடுகின்றேன்.
தோற்றாலும்,
வென்றாலும்
முடிவின்றி தொடர்கிறது
என் பகடை விளையாட்டு.
சில நேரங்களில்
வேடிக்கைப் பார்ப்பவனாக;
சில கணங்களில்
ஆடுபவனாக;
மற்றும் சில பொழுதிலோ
பகடையாகவும் மாறிவிடுகின்றேன்.
பகடை ஆடும் கைகள்
சோர்வடைவதே இல்லை.
எண்கள் மாறி மாறி வருகின்றன;
என் யூகங்கள் தோற்கின்றன.
நான் விளையாட்டின் அடிமை போல் மாறிவிடுகின்றேன்.
ஒவ்வொரு எண்ணிற்கும்
கற்பனை முலாம் பூசப்படுகின்றது.
எண்கள் தமக்குள் சேர்ந்து
எண்ணங்களின் போக்கை மாற்றிவிடுகின்றன.
ஆடிக் களைத்தோ
ஆட்டம் கலைந்தோ
ஆட எவரும் இல்லாத
அன்றைய பொழுதின் உறக்கத்தில்
எண்கள் சிறகு முளைத்தனவாய்
என் தவறுகளை எள்ளி நகைக்கிறது.
என் தூக்கம் கணத்துவிடுகின்றது.
பகடை விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
athu enna un valkaila nadanthatha appadiyae pottu iruka?
:-)
Post a Comment