தொலைந்த பனித்துளி

விடியலுக்குப் பின்பும்
இலையை ஒட்டியே பனித்துளி இருந்தது.

பின்பு கேட்ட
சிறு சலசலப்பிற்க்குப் பின்
பனியும் தொலைந்திருந்தது
இலையும் சிதைந்திருந்தது

குழந்தை ஒன்று அவ்வழியே சென்றிருந்தது;
நீர் பிடிக்க அம்மா அப்பாதையைக் கடந்திருந்தாள்;
வழிப்போக்கன் தடத்தைப் பதிந்திருந்தான்;
எவர் மீதோ கொண்ட கோபம்
எரிச்சலில் இலை மீதாக இருக்கலாம்;
சூரியனும் சுள்ளென்று விடியலில்.

ஏது என்றாலும்
அங்கு நிகழ்ந்திருந்தது
ஒரு நிகழ்வு
ஒரு இழப்பு
ஒரு மாற்றம்.

2 comments:

goma said...

ஒரு நிகழ்வு
ஒரு இழப்பு
ஒரு மாற்றம்

மூன்றும் உலகம் உருளுவதற்குத் தேவையான மென்பொருட்கள்

ꢦ꣄ꢬꢨꢸ பிரபு.. said...

சரியாகச் சொன்னீர்கள்.