இனம் தெரியாத பறவைக்குப்
பெயரிடல் போல
உனக்கு பெயர்கள் இட்டு மகிழ்கிறேன்.
ஆனால் நீயோ
மௌனத்தைப் பேசி புன்னகைக்கிறாய்.
வார்த்தை விளையாட்டிற்கு
வாளெடுத்து வருகிறாய்.
விழி வாள் பட்டு
நான் வீழும் முன்
உன் பெயர் ஜபிக்க
முன்னால் கோபம் சொல்லி
பின்னால் சிரிப்பாய்.
உன் பெயரை
மூச்சிரைக்கச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பேன்.
நீயோ
'சும்மா இரேன்'
என்று சொல்ல
அட
என் பெயரும் இனிக்கிறேதே
என்று மயங்குவேன்.
வார்த்தைகளுடன் முட்டி மோதி
உனக்கென பெயர் தேடி
இரவெல்லாம் விழித்திருப்பேன்.
ஆனால் நீயோ
ஏது சொன்னாலும்
என் பெயராய்த் தோன்றும்.
'தேவை என்ன பெயரில்'
என்று கேட்கிறாய்.
உண்மை தானே.
தேவதைக்கு தேவை என்ன பெயரில்.
இருந்தாலும்
நான் அழைக்க
ஜபித்துச் சாக
வேண்டாமா சில பெயர்கள்....
பெயரிடல்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment