நீ பேசும் பொழுதெல்லாம்
மௌனத்தை உடுத்திக் கொண்டாய்.
அழகானாய்.
உன் சாயலின்
ஒரு துளியை வாங்கி
எல்லா பெண்களும் அழகாகிவிட்டனர்.
உன் வார்த்தைகள்
உணர்வு தளங்களைத் தாண்டி
என்னை அழைத்துச் சென்றது.
நீ தேவதையானாய்.
உனது பிம்பங்களாகி
பெண்கள் எல்லாம் தேவதைகளானார்கள்.
நீ அவர்களின் இளவரசி.
இன்று,
ஒவ்வொரு விடியலும்
தீராத நமது காதலைப் பாடி
என்னைத் துயில் எழச் செய்கின்றது.
தேவதையின் காதல்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment